ஆசியா

கட்டாய விதிமுறையைத் தளர்த்திய வட கொரியா?

வட கொரியாவில் தற்போது கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்ற விதிமுறையை தளர்த்தியிருக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

அந்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்கள் முகக் கவசம் இன்றி நடமாடியதை அடுத்து இநந்தத் தகவல் வெளியானது. எனினும் நாட்டின் எல்லைகளில் முடக்க நிலை நீடிக்கிறது. இதர கொரோனா கட்டுப்பாடுகளும் நடைமுறையில் உள்ளன.

முகக் கவசம் அணிவதற்கான விதிமுறை தொடர்பில் எந்தவோர் அதிகாரபூர்வ அறிவிப்புகளும் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால் திரையரங்குகளிலும் மற்ற இடங்களிலும் மக்கள் முகக் கவசம் இன்றி நடமாடும் காட்சிகளை வட கொரியாவின் அரசாங்கத் தொலைக்காட்சியும் நாளிதழும் வெளியிட்டன.

கடந்த ஆண்டு (2022) செப்டம்பரில் இருந்ததைவிட இது அதிரடி மாற்றம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். முகக் கவசத்தைக் கட்டாயம் அணிய வேண்டும் என்ற விதிமுறை கடந்த ஜூலை முதல் திகதி நீக்கப்பட்டதாக அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட வானொலி தெரிவித்துள்ளது.

முகக் கவசத்தை அணிவதால் தோலிலும் கண்களிலும் அழற்சிகள் ஏற்படுகின்றன. அவற்றைத் தவிர்க்க அந்த விதிமுறை நீக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!