பிரித்தானியாவில் புதிய உச்சத்தை தொட்ட நோரோவைரஸ் தொற்றாளர்கள் : நிரம்பிய மருத்துவமனைகள்!

இந்த குளிர்காலத்தில் இங்கிலாந்தில் நோரோவைரஸ் உள்ளவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக NHS புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளால் கடந்த வாரம் சராசரியாக 1,160 மருத்துவமனை படுக்கைகள் நிரப்பப்பட்டன, இது முந்தைய வாரத்தில் 948 ஆக இருந்தத நிலையில் தற்போது 22 சதவீதம் அதிகரித்துள்ளது.
நோரோவைரஸ் அளவும் 12 மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட அதிகமாக உள்ளது. சராசரியாக 509 படுக்கைகள் அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளால் நிரப்பப்பட்டன.
NHS இங்கிலாந்து மருத்துவமனைகள் அதிக அளவிலான நோயை எதிர்கொள்வதாக எச்சரித்த நிலையில் இது வருகிறது.
பிப்ரவரி தொடக்கத்தில், ஒரு நாளைக்கு 961 நோயாளிகள் நோரோவைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டனர். இதன் விளைவாக, தொற்று பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனை மூன்று வார்டுகளை மூடியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.