இலங்கை

இலங்கையில் இனி வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்களுக்கு தடை இல்லை! அச்சத்தில் இந்தியா

வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்களின் வருகைக்கு விதிக்கப்பட்ட தடையை அடுத்த ஆண்டு முதல் நீக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக ஜப்பானிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்ட இலங்கை வெளியுறவு மந்திரி அலி சப்ரி இத்தகவலை தெரிவித்துள்ளார்.

“இலங்கை அரசாங்கம் வெவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறு விதிகளை வைத்திருக்க முடியாது. அதேசமயம் சீனாவை மட்டும் தடுக்க முடியாது. மற்றவர்களுக்கு இடையிலான பிரச்சினையில் இலங்கை எந்த பக்கமும் இருக்காது. அடுத்த ஆண்டு ஜனவரி வரை தடை அமலில் இருக்கும். அதன்பின்னர், வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்களை துறைமுகங்களில் நிறுத்துவதை இலங்கை தடை செய்யாது. இலங்கையில் பயன்படுத்தப்படாத கடல் வளங்கள் ஏராளமாக இருக்கின்றன. எனவே, ஆராய்ச்சி அவசியமானது. ஆனால் அது வெளிப்படையான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.” என ஜப்பான் ஊடகத்திடம் சப்ரி கூறியிருக்கிறார்.

சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல்களை இலங்கை துறைமுகத்தில் நிறுத்தி ஆய்வு செய்ய இந்தியாவும், அமெரிக்காவும் கண்டம் தெரிவித்தன.

இலங்கைக்கு மிக அருகில் இருக்கும் இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம், கல்பாக்கம் அணுமின் நிலையம், கூடங்குளம் அணு மின் நிலையம் உள்ளிட்ட 6 கடற்படை தளங்களை நவீனகருவிகள் மூலம் கண்காணிக்க வாய்ப்பு இருந்ததால் இந்தியா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த எதிர்ப்பையும் மீறி இலங்கை அரசாங்கம், இந்த ஆண்டின் துவக்கத்தில் சீனாவின் மற்றொரு ஆய்வுக் கப்பலுக்கு அனுமதி அளித்தது.

இதையடுத்து இந்தியா பாதுகாப்பு குறித்து கவலைகளை எழுப்பியது. இதையடுத்து வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்களை இலங்கை துறைமுகத்தில் நிறுத்துவதற்கு இலங்கை அரசு தடை விதித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

(Visited 38 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்