ஜப்பானில் பாரிய நிலநடுக்கம் : இலங்கைக்கு பாதிப்பா?
ஜப்பானின் வடக்கு கடற்கரையில் 7.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலநடுக்கம் இலங்கை நேரப்படி மாலை 7.45 மணிக்கு ஏற்பட்டது, இதனால் சுனாமி அல்லது பிற பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
பொதுமக்கள் பீதியடையவோ அல்லது உறுதியற்ற போலியான செய்திகளைப் பரப்பவோ வேண்டாம் என்று அதிகாரிகள் வலியுறுத்தினர்.





