இலங்கை செய்தி

எரிவாயு இல்லை!!! பொரளை மயானத்தில் தகன நடவடிக்கைள் நிறுத்தம்

பொரளை மயானத்தில் தகனம் செய்வதற்கு எரிவாயு இல்லாததால் தகனம் செய்யாமல் இன்று (05) புதைக்கும் நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இன்று காலை, இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதை நிறுத்திவிட்டு, தகனம் செய்யப்பட வேண்டிய உடல்களை ஜாவத்த மயானத்திற்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது.

எரிவாயு விலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள நிர்வாக பிரச்சினை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், நாளை மாலைக்குள் எரிவாயு இருப்புக்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

(Visited 8 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை