போதைபொருள் சார்ந்த குற்றங்களுக்கு மரண தண்டனை பற்றி தீர்மானம் எடுக்கப்படவில்லை ;அமைச்சர் நளிந்த

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபவர்களுக்கு மரண தண்டனை விதிப்பது தொடர்பில் அரசாங்கத்துக்குள் எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) நடைபெற்றது.
இதன்போது போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் நபர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என சமூகத்தில் எழுந்துள்ள கருத்தாடல் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
‘மரண தண்டனை வழங்குவது பற்றி தீர்மானம் எடுக்கப்படவில்லை. சமூகத்தில் கருத்தாடல் உருவாகி இருந்தாலும் அரசாங்க மட்டத்தில் கலந்துரையாடல் ஆரம்பமாகவில்லை.” என்றார் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ.
(Visited 2 times, 2 visits today)