அரசியல் இலங்கை செய்தி

அரசியல் புயலாக மாறியுள்ள ஆங்கில பாடம்: பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை?

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு Harini Amarasooriya எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி SJP திட்டமிட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் நேற்று (05) கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்றது.

இதன்போதே மேற்படி முடிவு எடுக்கப்பட்டது என சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையொப்பம் பெறும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகும் எனவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தரம் ஆறு மாணவர்களுக்கான ஆங்கிலப் பாடத்திட்டத்தில், வயது வந்தோருக்கான இணையத்தளம் ஒன்றின் முகவரி அச்சிடப்பட்டிருந்த விவகாரம் தொடர்பில் கல்வி அமைச்சு பதவியை வகிக்கும் பிரதமருக்கு எதிராக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

பிரதமர் பதவி விலகவேண்டும் என பல கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன. எனினும், பிரதமர் பதவி விலகவேண்டியதில்லை, விசாரணை நடக்கின்றது என அரச தரப்பில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே பிரதமருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியும் அரசியல் போரை ஆரம்பித்துள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!