செய்தி

ஹமாஸ் உடன் போர் நிறுத்தம் செய்ய வாய்ப்பில்லை – இஸ்ரேல் பிரதமரின் அறிவிப்பு

இஸ்ரேல் – ஹமாஸ் உடன் போர் நிறுத்தம் செய்ய வாய்ப்பில்லை என இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

ஹமாஸ் மைப்பு இருக்கும்வரை மனிதாபிமான உதவிகள் எதுவும் செய்யமுடியாது எனவும் திட்டவட்டமாக இஸ்ரேல் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஒருவரத்துக்கும் மேலாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.

கடந்த சனிக்கிழமை ஹமாஸ் அமைப்பினர் தாக்குதலை தொடங்கியதை அடுத்து, இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம் உருக்குலைந்துள்ளது.

ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேல் மீது தொடர்ந்து ராக்கெட் குண்டுகளை வீசியும், இஸ்ரேல் நகரங்களுக்குள் ஊடுருவியும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால், ஹமாஸ் அமைப்புக்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்று தனது தாக்குதலை இஸ்ரேல் அதிகரித்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் ஒடுக்கப்பட்டது போல் ஹமாஸ் இயக்கமும் ஒடுக்கப்பட வேண்டும் என கூறி இஸ்ரேலிய படை தாக்குதல் தீவிரமடைந்து வருகிறது.

இஸ்ரேல் – ஹமாஸ் தொடர் தாக்குதல் இன்று 10ஆவது நாளாக தொடர்ந்து வருகிறது. இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. காசாவில் ஹமாஸ் படையினரின் இடங்களை குறி வைத்து இஸ்ரேல் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் அங்கு கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின.

இந்த தொடர் மோதலில் இஸ்ரேலியர்கள் 1,300-க்கும் மேற்பட்டோர் இறந்ததாகவும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல், காசாவில் பலி எண்ணிக்கை 2,670 ஆக உயர்ந்துள்ளன. 9,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழலில் ஹமாஸ் உடன் போர் நிறுத்தம் செய்ய வாய்ப்பில்லை என இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அதாவது, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கும் வரையில் இந்த போர் நிறுத்தப்படாது என அறிவித்துள்ளார். ஹமாஸ் அமைப்பு இருக்கும்வரை மனிதாபிமான உதவிகள் எதுவும் செய்ய முடியாது எனவும் இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

ஒரே குறிக்கோள் ஹமாஸ் அமைப்பினரை ஒடுக்குவதே என கூறப்படுகிறது. அதற்கேற்றாற் போல, ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் காசா பகுதியில் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரபடுத்தி வருகிறது. இதனால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. காசா பகுதியில் இருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர். மேலும், ஹமாஸ் அமைப்பினரிடம் 199 பிணைக்கைதிகளாக இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

(Visited 2 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content