செய்தி விளையாட்டு

தனி நபராக இந்திய அணியை வலுப்படுத்திய நிதிஷ்குமார்

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்சில் 122.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 474 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது.

சிறப்பாக ஆடி வந்த ஜெய்ஸ்வால் தேவையில்லாமல் 82 ரன்னில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். ஜெய்ஸ்வால் அவுட் ஆன சிறிது நேரத்திலேயே விராட் கோலியும் ஆப் சைடு வந்த பந்தை அடிக்க முற்பட்டு அவுட் ஆகி வெளியேறினார்.

பின்னர் ஜோடி சேர்ந்த நிதிஷ்குமார் மற்றும் வாசிங்டன் சுந்தர் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்தனர்.

பொறுப்புடன் விளையாடிய நிதிஷ் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். பாக்ஸிங் டே டெஸ்டில் அரை சதம் கடந்ததை ‘புஷ்பா’ ஸ்டைலில் நிதிஷ் குமார் கொண்டாடினார்.

இதனையடுத்து மழை குறுக்கிட்டதால் சிறுது நேரம் ஆட்டம் தடைபட்டது. பின்னர் மீண்டும் ஆட்டம் தொடங்கியதும் நிதானமாக விளையாடி வந்த வாசிங்டன் சுந்தர் 50 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து பொறுப்புடன் விளையாடி வந்த நிதிஷ்குமார் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்து அசத்தினார்.

3 ஆம் நாள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் அடித்துள்ளது. நிதிஷ்குமார் 105 ரன்களுடனும் சிராஜ் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

(Visited 42 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி