இலங்கை

தரமற்ற மருந்து பாவனையால் பறிப்போன ஒன்பது உயிர்கள்!

தரமற்ற மருந்து பாவனையால் கடந்த மூன்று மாதங்களில், 09 பேர் உயிரிழந்துள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் ரவீந்திர கஹந்த ஆரச்சி  தெரிவித்துள்ளார்.

சுகாதார துறையை தனியார் மயப்படுத்தவேண்டாம் எனக் கோரிக்கை வைத்துள்ள அவர், நோயாளர்களின் உயிரை பாதுகாக்குமாறும் வலியுறுத்தினார்.

ஒளடதங்கள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் முறையற்ற சில செயற்பாடுகள் காரணமாக நாட்டுக்கு கொண்டு வரப்படும் மருந்துகள் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளதாக தெரிவித்த அவர், இந்த மருந்துகளால் மூன்று மாதங்களில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அரச மருந்தாளர்கள் சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ, ஐரோப்பிய ஒன்றியங்கள் போன்ற இடங்களிலும் இவ்வாறு மரணங்கள் இடம்பெறுவதாகவும், இருப்பினும் அந்த மரணங்களுடன் இவற்றை ஒப்பிட முடியாது எனவும் கூறினார்.

(Visited 5 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content