ஐரோப்பா

உக்ரைனில் ரஷ்ய ஏவுகணைகள் தாக்கியதில் ஒன்பது பேர் பலி : ஜெலென்ஸ்கி கடும் எச்சரிக்கை

உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரான கிரிவி ரிஹ் இல் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பை ரஷ்ய ஏவுகணைகள் தாக்கியதில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்

மற்றும் ஐந்து குழந்தைகள் உட்பட 29 பேர் காயமடைந்தனர்.

“ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரமும், உக்ரைன் அதன் கூட்டாளிகளுடன் சேர்ந்து வான் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்பதை ரஷ்ய பயங்கரவாதம் நிரூபிக்கிறது” என்று உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தாக்குதலுக்குப் பிறகு எச்சரித்துள்ளார்.

இடிபாடுகளில் உயிர்தப்பியவர்களைத் தேடும் மீட்புப் பணி காணொளி காட்சிகளை அவர் பதிவிட்டதுடன், ரஷ்ய வான்வழித் தாக்குதல்களைத் தடுக்க அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகளின் விநியோகங்களை அதிகரிக்குமாறு உக்ரேனின் கூட்டாளிகளுக்கு அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

“நவீன வான் பாதுகாப்பு அமைப்புகள் மக்கள், எங்கள் நகரங்கள் மற்றும் எங்கள் நிலைகளுக்கு அதிகபட்ச பாதுகாப்பை வழங்க முடியும். முடிந்தவரை எங்களுக்கு அவை தேவை” என்று ஸெலென்ஸ்கி கூறினார்.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!