இன்றைய முக்கிய செய்திகள் உலகம் செய்தி

புதிய விசா விதிகளை அறிமுகப்படுத்தும் நியூசிலாந்து

சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தரும் போது, அவர்களின் அலுவலகப் பணிகளை முன்னெடுக்க அனுமதிக்கும் வகையில் புதிய விசா விதிகளை நியூசிலாந்து அறிமுகப்படுத்தவுள்ளது.

இதனால் சுற்றுலாத்துறையும் பொருளாதாரமும் வளர்ச்சி காணும் என்றே நியூசிலாந்து நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

நியூசிலாந்தில் பயணம் செய்யும் போது மக்கள் வேலை செய்ய அனுமதிக்கும் வகையில் ஜனவரி 27 முதல் பார்வையாளர் விசா விதிகள் மாறும் என்று குடிவரவு அமைச்சர் எரிகா ஸ்டான்ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.

மேலும், மக்கள் எங்கள் நாட்டைப் பார்வையிடவும், வேலை செய்யவும் ஏற்ற இடமாகக் காண வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எத்தனை பேர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று தெரியவில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், இங்கு வேலை செய்யவும் பயணம் செய்யவும் விரும்பும் மக்களை நியூசிலாந்து குறிவைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.

ஜனவரி 27ம் திகதி முதல் அமுலுக்கு வரும் இந்த புதிய விசா விதிகளின் அடிப்படையில், நியூசிலாந்தில் பயணம் மேற்கொள்பவர்கள், தங்களின் வெளிநாட்டு நிறுவனத்திற்காக பணியாற்றலாம்.

ஆனால் நியூசிலாந்து நிறுவனத்திற்காக பணியாற்ற முடியாது. 92 நாட்களுக்கு மேல் பணியாற்றும் நபர்களிடம் வரி வசூலிக்கப்படும். நியூசிலாந்து சுற்றுலாவால் ஆண்டுக்கு 11 பில்லியன் டொலர் அளவுக்கு வருவாய் ஈட்டுகிறது.

அத்துடன் நியூசிலாந்து மக்களுக்கு 200,000 வேலை வாய்ப்பையும் உருவாக்கியுள்ளது. ஆனால் 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நியூசிலாந்தின் பொருளாதாரம் தொழில்நுட்ப ரீதியாக மந்தநிலைக்குள் நுழைந்தது என்றே கூறப்படுகிறது.

(Visited 16 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி