இலங்கை

புத்தாண்டு பாடல் விவகாரம் – கலால் திணைக்கள அதிகாரிக்கு விளக்கமறியல்

புத்தாண்டு பாடலை திரிபுபடுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ரன்வல படையணியுடன் இணைந்து மூத்த பாடகர் ரோஹன பெத்தகே பாடிய புத்தாண்டு பாடலை திரிபுபடுத்தியதாக சந்தேகநபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தலத்துஓயா பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதான கலால் திணைக்கள அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் குளியாபிட்டிய நீதவான் நீதிமன்றில் இன்று (17) ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் வடமேற்கு மாகாணப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 5 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்