வட அமெரிக்கா

லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் புதிதாக ஏற்பட்டுள்ள காட்டுத்தீ : 31000 பேர் வெளியேற்றம்!

லாஸ் ஏஞ்சல்ஸின் வடக்கு பகுதியில் புதிதாக காட்டுத்தீ பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸ்டாயிக் ஏரிக்கு அருகிலுள்ள மலைப்பகுதிகளை கொடூரமான தீப்பிழம்புகள் ஆக்கிரமித்துள்ளதாகவும், ஆறு மணி நேரத்தில் 3,884 ஹெக்டேர் பரப்பளவிற்கு வேகமாக பரவியதாகவும் தெரிவிக்கப்படுகிறது,

இந்த வார இறுதியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். இருப்பினும் நச்சு சாம்பல்கள் நீரோட்டத்துடன் கலப்பதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதனை தடுப்பதற்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

லாஸ் ஏஞ்சல்ஸுக்கு வடக்கே சுமார் 56 கிலோமீட்டர் தொலைவில், சாண்டா கிளாரிட்டா நகருக்கு அருகில் வசிக்கும் 31000 மக்களை வெளியேற்றவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!