ஆசியா செய்தி

சிங்கப்பூரில் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த அறிமுகமாகும் புதிய திட்டங்கள்

சிங்கப்பூரில் வீடுகளில் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த உதவும் பாகங்களைப் பொருத்தும் திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அந்தப் புதிய திட்டத்தால் தண்ணீர்ப் பயன்பாட்டைக் குறைக்க முடியும் என்று தேசியத் தண்ணீர் அமைப்பான PUB தெரிவித்துள்ளது.

நகர மன்றங்கள் அதிக சக்தி வாய்ந்த கழுவும் இயந்திரங்களுக்கு மாறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் 2 வருடங்களில் இந்த நடைமுறை நடப்புக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய இயந்திரங்கள் 20 சதவீத கூடுதலான ஆற்றல்மிக்கவை என்று கூறப்பட்டது. அதனால் ஒரு நாளில் 2.5 மில்லியன் கேலன் தண்ணீரைச் சேமிக்க முடியும்.

சிங்கப்பூர் உலகத் தண்ணீர் தினத்தோடு இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்திர தண்ணீர்ச் சேமிப்பு இயக்கத்தில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!