ஆசியா

சிங்கப்பூர் சிம் அட்டை தொடர்பில் புதிய சட்டம்

சிங்கப்பூர் சிம் அட்டை தொடர்பில் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதற்கமைய, அட்டைகளைக் குற்றச்செயல்களுக்குப் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

மோசடிகளுக்காக சிம் அட்டைகள் விற்கப்படுவதையும் அவை தவறாகப் பயன்படுத்தப்படுவதையும் தடுக்கப் புதிய சட்டம் உதவும்.

குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்தச் சட்டபூர்வமாய் சிம் அட்டைகளை வாங்குவோரைத் தண்டிப்பது நோக்கமல்ல என்று இரண்டாம் உற்துறை அமைச்சர் ஜோசஃபின் தியோ (Josephine Teo) கூறினார்.

பொறுப்பில்லாமல் சிம் அட்டைகளுக்குப் பதிவு செய்பவர்கள், அவற்றைப் பெறுபவர்கள், வைத்திருப்பவர்கள், விநியோகிப்பவர்கள், கடைக்காரர்கள் ஆகிய பிரிவினர் மீது நடவடிக்கை எடுக்க சட்டம் வழியமைக்கிறது.

பணம் வாங்கிக்கொண்டு சிம் அட்டைகளை அடுத்தவருக்குக் கொடுப்பவர்கள் அது குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்படுமெனத் தமக்குத் தெரியாது என்று சொல்லி இனி தப்பமுடியாது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூவாண்டுச் சிறை, 10,000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

(Visited 21 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!