இலங்கையில் அமுலுக்கு வரும் புதிய திட்டம்

இலங்கையில் Clean Sri Lanka திட்டத்துடன் இணைந்து, மத்திய சுற்றாடல் அதிகாரசபை புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
பொலிதீன் பிளாஸ்டிக்கால் மனிதர்களுக்கும் முழு சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் பாதிப்பைத் தடுக்கும் நோக்கத்துடன் இத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, சுற்றாடல் அதிகாரசபை, சுற்றுச்சூழல் பொலிஸ் பிரிவு மற்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபையுடன் இணைந்து, பொலிதீன் பிளாஸ்டிக்கை தவறாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் பேரழிவு குறித்து உற்பத்தியாளர்கள், கடை உரிமையாளர்கள், கடை ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் ஒரு பிரச்சாரத்தை நடத்தியது.
இங்கு, 45 வியாபார நிலையங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் சுமார் 860 கிலோகிராம் சட்டவிரோத பொலிதீன் ‘லஞ்ச் ஷீட்கள்’ பறிமுதல் செய்யப்பட்டன.