இலங்கையில் ரயில் பயணிகளுக்கு அறிமுகமாகும் புதிய நடைமுறை

ரயில் பயணச்சீட்டுக்குப் பதிலாக முன்பணம் செலுத்திய ரயில் அணுகல் அட்டையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன் புதிய அட்டை அறிமுகம் செய்யப்படவுள்ளது.
அட்டைகளை பயன்படுத்தும் மக்கள் ஒவ்வொரு நிலையத்திலிருந்தும் அணுகும் வகையில் நவீன தொழில்நுட்பக் கருவி பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.
அதற்காக தனியார் நிறுவனத்துடன் இணைந்து செயற்பட ஆரம்பித்துள்ளதாக திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதன் மூலம் பயணிகளுக்கு சிறப்பான சேவையை வழங்க முடியும் எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, முன்பணம் செலுத்தும் ரயில் அட்டையை சரிபார்க்க அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
(Visited 12 times, 1 visits today)