ஐரோப்பா செய்தி

ஐரோப்பிய நாடுகளில் புதிய நடைமுறை – வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய தகவல்

ஜனவரியில் ஒரு புதிய ஐரோப்பிய ஒன்றிய ஒழுங்குமுறை அமலுக்கு வரும் நிலையில் வங்கி பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பாவில் உள்ள வங்கி மற்றும் சேமிப்பு வங்கி வாடிக்கையாளர்கள் கூடுதல் செலவின்றி சில நொடிகளில் பணத்தை மாற்ற முடியும்.

இன்று முதல் ஐரோப்பிய நாடுகளில் உள்ள வங்கிகள் கூடுதல் கட்டணம் இல்லாமல் உடனடி பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியும்.

அதற்கமைய, வங்கிகளில் வசூலிக்கப்படும், உடனடி வங்கிப் பரிமாற்ற கட்டண முடிவுக்கு வருகிறது. அதற்கமைய இலவசமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உடனடியாக பணத்தை மாற்றுவது இன்னும் எளிதாகவும் மலிவாகவும் இருக்கும். ஒக்டோபர் முதல், வங்கிகள் கூடுதல் செலவுகள் இல்லாமல் அத்தகைய பரிமாற்றங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது அதிக நெகிழ்வுத்தன்மையை அளிக்கிறது. யூரோப்பகுதி நாடுகளில் உள்ள வங்கி வாடிக்கையாளர்களும், தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கும் இலவசமாக வழங்கப்படும்.

கடந்த ஆண்டு, ஐரோப்பிய ஒன்றிய மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றம் உடனடி வங்கி பரிமாற்றங்களுக்கான ஒழுங்குமுறையை திருத்துவதற்கு ஒப்புதல் அளித்தன.

அதற்கமைய ஜெர்மனி வாடிக்கையாளர்களுக்கு உடனடி பணப்பரிமாற்றம் இலவசமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!