May 13, 2025
Breaking News
Follow Us
ஆஸ்திரேலியா இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

ஆஸ்திரேலியாவில் இளைஞர்களின் குற்ற விகிதங்களைக் குறைக்க நடைமுறையாகும் புதிய சட்டம்

அவுஸ்திரேலியாவின் வடக்குப் பிரதேசம் (NT) குற்றப் பொறுப்பின் வயதைக் குறைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.

புதிய சட்டம் 10 வயது அல்லது அதற்கு மேற்பட்ட சிறுவர்கள் சிறையில் அடைக்க அனுமதிக்கிறது.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கன்ட்ரி லிபரல் கட்சி (CLP) அரசாங்கத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்த நடவடிக்கை மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கொள்கையை மாற்றியமைக்கிறது.

முன்னதாக சிறுவர்களை சிறையில் அடைப்பதற்கான வயது எல்லை 12 அல்லது அதற்கும் மேலாக காணப்பட்டிருந்தது.

இந்த நிலையில், புதிய தீர்மானமானது அதிகரித்து வரும் இளைஞர்களின் குற்ற விகிதங்களை குறைக்கும் என்று நம்பப்படுகிறது.

எனினும், மனித உரிமைக் குழுக்கள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் பழங்குடியின அமைப்புகள் இந்த நடவடிக்கையைக் கண்டித்துள்ள நிலையில், இந்த முடிவு கடுமையான விவாதத்தைத் தூண்டியுள்ளது.

(Visited 24 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி