தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு புதிய வீடுகள்!
தமிழகத்திற்கு இடம்பெயர்ந்துள்ள இலங்கை தமிழர்களுக்கு புதிய வீடுகளை கட்டிக்கொடுக்க அம்மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதன்படி 19 மறுவாழ்வு முகாம்களில் 15000 வீடுகளை கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த வீடுகளை நிர்மாணிப்பதற்காக 79.70 மில்லியன் இந்திய ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, கோவை, ஈரோடு, சேலம், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)