ஆசியா

சிங்கப்பூரில் இளம் தம்பதிகளுக்கு புதிய வீடு – அமுலாகும் புதிய திட்டம்

சிங்கப்பூரில் இளம் தம்பதிகள் வீடு வாங்குவதை எளிதாக்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, கழக வீடு வாங்க விரும்பும் இளம் தம்பதியில் ஒருவர் முழுநேர மாணவர் அல்லது தேசியச் சேவையாளராக இருந்தால் அவர்கள் வருமான மதிப்பீட்டை ஒத்திவைக்க உதவும் புதிய திட்டத்துக்குத் தகுதிபெறுவர்.

விண்ணபிக்கும்போது வருமானத்தைக் காட்டத் தேவையில்லை எனவும் சாவி வாங்குவதற்முன் காட்டினால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூலை மாதம் புதிய திட்டம் அமுலுக்கு வருகிறது. அத்தகைய தம்பதிகள் வீடுவாங்குவதில் சிரமத்தை எதிர்நோக்குவதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்துக்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து புதிய திட்டம் அறிமுகம் காண்கிறது.

தம்பதிகள் கடன் கிடைப்பதிலும் வீட்டு முன்பணம் செலுத்துவதிலும் சிக்கலை எதிர்நோக்குகின்றனர்.

வருமான மதிப்பீட்டை ஒத்திவைக்கும் திட்டத்தை இளம் தம்பதிகளுக்கு விரிவுபடுத்துவதால் அவர்கள் கூடுதல் கடனுக்குத் தகுதிபெறமுடியும்.

பின்னொரு தேதியில் வருமானம் மதிப்பிடப்படுவதால் இருவரின் சம்பளமும் கருத்தில்கொள்ளப்படும். இதனால் வீட்டு முன்பணம் குறையும். மேலும் சிறந்த வட்டாரத்தில் அவர்களால் வீடுவாங்கமுடியும்.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்