அரசியல் இலங்கை

புதுடெல்லி குண்டு வெடிப்பு: இலங்கை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

புதுடெல்லியில் குண்டு வெடித்துள்ள சம்பவம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அச்சம்பவத்தால் இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று தெரிவித்தார்.

இந்தியாவில் குண்டு வெடித்துள்ளது. எமது நாட்டு தேசிய பாதுகாப்புக்கும் ஏதேனும் அச்சுறுத்தல் உள்ளதா என அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர்,

“தற்போது அவ்வாறு எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. அச்சுறுத்தல் தொடர்பில் தகவல் கிடைக்கப்பெறவில்லை. இலங்கையில் புலனாய்வு அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டுவருகின்றன.

முப்படைகள் மற்றும் பொலிஸார் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளனர்.

எனவே, பாதுகாப்பு தொடர்பில் அச்சுறுத்தல் இல்லை.” என்று குறிப்பிட்டார்.

(Visited 4 times, 4 visits today)

Saranya

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!