ஐரோப்பா

நியூ கலிடோனியாவின் சர்வதேச விமான நிலையத்தை மீண்டும் திறக்க நடவடிக்கை!

பிரெஞ்சு பசிபிக் பிரதேசமான நியூ கலிடோனியா தனது இரவு நேர ஊரடங்கு உத்தரவை 02 மணி நேரத்திற்கு குறைத்துள்ளது.

ஒரு மாதத்திற்கும் மேலாக வணிக விமானங்களுக்கு மூடப்பட்டிருந்த  சர்வதேச விமான நிலையத்தை மீண்டும் திறக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

நியூ கலிடோனியாவின் தலைநகரான நௌமியாவை சிட்னி, டோக்கியோ, சிங்கப்பூர் மற்றும் பிற பசிபிக் மையங்களுடன் இணைக்கும் லா டோன்டூடா விமான நிலையம் நாளை (17.06) முதல் மீண்டும் திறக்கப்படும்.

ஒரே இரவில் ஊரடங்கு உத்தரவு இரண்டு மணி நேரம் குறைக்கப்படுகிறது.

சர்ச்சைக்குரிய வாக்களிப்பு சீர்திருத்தங்கள் தொடர்பாக மே 13 அன்று வெடித்த வன்முறைக்கு பிறகு கலவரங்கள் வெடித்த நிலையில், அதனை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!