ஆசியா செய்தி

நேபாள நாட்டின் பெண் பிரதமர் உத்தியோகப்பூர்வமாக பதவியேற்றார்!

நேபாளத்தின் புதிய பிரதமர் சுஷிலா கார்க்கி இன்று (09.14) பதவியேற்றுள்ளார்.

நாட்டை “மீண்டும் கட்டியெழுப்ப அமைதியையும் ஒத்துழைப்பையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் முதல் பெண் பிரதமரான சுஷிலா கார்க்கி, தனது தற்காலிக அலுவலகத்தில் கூடியிருந்த உயர் அதிகாரிகளிடம், கொல்லப்பட்ட போராட்டக்காரர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 1 மில்லியன் ரூபாய் நிதி இழப்பீடு வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

ஜெனரல் இசட் எதிர்ப்பு என்று அழைக்கப்படும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் செப்டம்பர் 8 ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில் மிகப் பெரிய வன்முறை போராட்டத்தில் முடிந்தது.

இதில் 71 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

(Visited 3 times, 3 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி