நெல்சன் மண்டேலாவின் பாரியாருக்கு இந்திராகாந்தி அமைதி விருது!
நெல்சன் மண்டேலாவின் பாரியாரான கிரேஷா மஷேலுக்கு Graça Machel 2025 ஆம் ஆண்டிற்கான இந்தியா காந்தி அமைதிப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி, சுகாதாரம்,பொருளாதாரம், மனித உரிமைகள் ஆகியவற்றில் கிரேஷா மஷேல் ஆற்றிய பணிகளுக்காகவே அவருக்கு இவ்விருது வழங்கப்படுகின்றது.
மாசாம்பிக் நாட்டைச் சேர்ந்த இவர் மனித உரிமை போராளியாக பார்க்கப்படுகின்றது.
அமைதி, ஆயுதக்குறைப்பு மற்றும் வளர்ச்சிக்காக ஆண்டுதோறும் இந்திரா காந்தி அமைதிப் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவாக இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை இந்த விருதை வழங்குகிறது.
இந்த விருது இந்திய நாணய மதிப்பிய் ஒரு கோடி ரூபா பணம், பாராட்டுப் பத்திரம் மற்றும் கோப்பை ஆகியவற்றை கொண்டுள்ளது.
கிரேஷா மஷேலின் முதல் கணவரான மொசாம்பிக் நாட்டு ஜனாதிபதி சமோரா மொயிசஸ் மச்செல் 1986-ம் ஆண்டு மறைந்தார்.
அதைத்தொடர்ந்து நெல்சன் மண்டேலாவை கிரேஷா கரம் பிடித்தார்.





