வட அமெரிக்கா

எந்த தரப்பினரதும் மிரட்டல்களுக்கும் அஞ்சப்போவதில்லை – பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

எந்தவொரு தரப்பினதும் மிரட்டல்களுக்கு அச்சம் கொள்ளப் போவதில்லை கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கனடிய ராஜதந்திரி ஜெனீபர் லைன் சீனாவிலிருந்து நாடு கடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டமை குறித்து அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயகத்தை பாதுகாக்க சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.ஒட்டாவாவில், ஊடகவியலாளர்களிடம் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.கனடா மீதும் கனடிய மக்கள் மீதும் தேவையற்ற தலையீடுகள் மேற்கொள்ளப்படுவதனை தடுப்பதற்கு சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சீனாவிற்கு பயணம் செய்யும் கனடியர்களின் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் எனவும், பயண அறிவுறுத்தல்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படும்ட எனவும் வெளிவிவகார அமைச்சர் மிலெனி ஜோலி தெரிவித்துள்ளார். சீனாவிற்கும் கனடாவிற்கும் இடையில் அண்மைய நாட்களாக முரண்பாட்டு நிலைமை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(Visited 1 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content