இலங்கை

மியன்மாரில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்பது தொடர்பில் பேச்சுவார்த்தை!

மியன்மாரில் உள்ள சைபர் கிரைம் முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்பது தொடர்பாக பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன, மியன்மார் பிரதமருடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.

4வது பிம்ஸ்டெக் தேசிய பாதுகாப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மியான்மர் சென்றிருந்த வேளையில் மியான்மர் பிரதமர் மின் ஆங் ஹ்லைங்கை அந்நாட்டு பிரதமர் அலுவலகத்தில் பாதுகாப்பு செயலாளர் சந்தித்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறித்த இலங்கையர்களை மீட்பதற்கு உதவுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளதுடன், பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை வழங்குவதற்கு தமது அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை மியன்மார் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content