ஐரோப்பா

பெல்ஜியத்தில் 30க்கும் அதிகமான பாடசாலைகள் திடீரென மூடல்

பெல்ஜியத்தின் பிரசல்ஸ் மற்றும் பிரபாண்ட் பகுதியில் உள்ள பாடசாலைகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வெடிகுண்டு எச்சரிக்கை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் பெறப்பட்ட வெடிகுண்டு எச்சரிக்கை காரணமாக பிரஸ்ஸல்ஸ் மற்றும் பெல்ஜியத்தின் பிரபாண்ட் பகுதியில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

குறித்த பட்டியலில் 30 பாடசாலைகள் இணைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“வாலோனியா பிரஸ்ஸல்ஸ் கல்வி மையம், தகுதிவாய்ந்த அதிகாரிகளுடன் இது தொடர்பில் கலந்துரையாடலில் உள்ளது.

இந்த நிலைமை நிலையான மதிப்பீட்டிற்கு உட்பட்டது. பல தளங்கள் ஏற்கனவே சரிபார்க்கப்பட்டுள்ளன. நிலைமை மறுபரிசீலனை செய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

(Visited 12 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!