செய்தி

லேடி சூப்பர்ஸ்டார் உடன் மீண்டும் கூட்டணி அமைத்த யோகிபாபு… எதிர்பார்ப்பு எகிறியது

யூடியூபர் டியூடு விக்கி இயக்கத்தில் நயன்தாரா கதையின் நாயகியாக நடிக்கும் மண்ணாங்கட்டி படத்தின் பூஜையில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தன்னுடைய தேர்ந்த நடிப்புத்திறனாலும், வசீகர அழகாலும் பல ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், தற்போது புதிய தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார்.

இவருடன் யோகிபாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன், நரேந்திர பிரசாத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S .லக்ஷ்மன் குமார், இப்படத்தை பெரும் பொருட் செலவில் தயாரிக்கிறார்.

இணை தயாரிப்பை A வெங்கடேஷ் மேற்கொள்கிறார். டியூட் விக்கி எழுதி, இயக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் அண்மையில் வெளியிட்டள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களை கவர்ந்து வைரலானது.

ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். படத்தொகுப்பை ஜி.மதன் கவனிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இப்படத்தின் பூஜையில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

நயன்தாரா இந்த பூஜையில் கலந்துகொள்ளவில்லை. மண்ணாங்கட்டி வித்தியாசமான கதையம்சம் கொண்ட படமாக உருவாக உள்ளது.

ஏற்கனவே நயன்தாராவும், யோகிபாபுவும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த கோலமாவு கோகிலா திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அப்படத்திற்கு பின்னர் மண்ணாங்கட்டி படம் மூலம் அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்துள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

 

(Visited 3 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content