இலங்கை

கொழும்பில் தேசியமட்ட விளையாட்டு போட்டிகள் – சாதித்த லக்சாயினி

கொழும்பில் பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட விளையாட்டு போட்டிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் தேசிய ரீதியில் இரண்டாம் இடம் பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளளார் மடு கல்வி வலய மாணவி லக்சாயினி.

இந்நிலையில் ரைகொண்டோ போட்டியில் முதன் முதலாக பங்குபற்றி மன்னார் மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட மன்/ பெரியபண்டிவிரிச்சான் மகா வித்தியாலயத்தின் மாணவியே குறித்த சாதனையை படைத்துள்ளார்.

மன்/பெரியபண்டிவிரிச்சான் மகா வித்தியாலய பாடசாலையின் விளையாட்டு வரலாற்றில் நீண்ட காலத்தின் பின் தேசிய மட்டத்தில் 2-ம் இடத்தைப் பெற்று வெள்ளி பதக்கத்தை தனதாக்கி கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சாதனையை படைத்து பாடசாலைக்கும், கிராமத்திற்கும், மடு கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்த மாணவிக்கு மன்/பெரியபண்டிவிரிச்சான் மகா வித்தியாலய பாடசாலை சமூகம் தங்களது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!