இலங்கை செய்தி

திருகோணமலையில் குறுந்திரைப்படத்தில் நடித்த கம்சத்வனி அவர்களுக்கு தேசிய விருது

திருகோணமலை-கிளிவெட்டி மகா வித்தியாலயத்தினால் தயாரிக்கப்பட்டு திரு.புஹாரி நளீர் அவர்களுடைய இயக்கத்தில் வெளியான “பள்ளிக்கூடம் ” எனும் குறுந்திரைப்படத்தில் நடித்த செல்வி.கோ.கம்சத்வனி அவர்களுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது குவியம் அமைப்பினால் வழங்கப்பட்டுள்ளது.

அவ்விருது மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.Z.M.M.நளீம் அவர்களினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இக்குறுந்திரைப்படமானது சமூகத்தில் மாணவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை வெளிப்படுத்தும் நோக்கிலும் மாணவர்கள் மத்தியில் ஒழுக்க விழுமியங்களை வளர்த்தெடுக்கும் நோக்கிலும் மற்றும் சிறுவர் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கிலும் திரு.பா.கோணேஸ்வரராசா அதிபர் மற்றும் இயக்குனரான திரு. புஹாரி நளீர் ஆகியோரின் ஒருங்கிணைந்த செயற்பாட்டில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நடிப்பில் தயாரிக்கப்பட்டமை குறிப்பித்தக்கதாகும்.

(Visited 9 times, 1 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை