இலங்கை

நாமலுக்கு ஏற்பட்டுள்ள திடீர் சந்தேகம்!

தோல்வியடைந்த கரிம உரத் திட்டத்தை அமுல்படுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு போராட்டத்தை முன்னெடுத்த மூன்றாம் தரப்பு ஆலோசனை வழங்கியதாக சந்தேகிக்கப்படுகின்றது என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிடுகின்றார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஹிரியால தொகுதிக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ மேற்படி கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  முன்னாள் ஜனாதிபதிக்கு யார் அந்த அறிவுறுத்தல்களை வழங்கியது என்பது குறித்து ஆராயப்பட வேண்டும் என்றார்.

யார் என்ன சொன்னாலும் கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்ட கரிம உரத் திட்டம் முற்றாகத் தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் ஏற்றுக் கொண்டார்.

எவ்வாறாயினும், உர மானியம் ஒருபோதும் குறைக்கப்படாது என்பதில் தாம் உறுதியாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

(Visited 14 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்