அரசியல் இலங்கை செய்தி

பிரதமருக்கு நாமல் நன்றி தெரிவிப்பு!

விசேட நாடாளுமன்ற அமர்வை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுத்த பிரதமருக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் விசேட கூட்டத்தொடர் எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறும் என்று சபாநாயகர் இன்று அறிவித்தார்.

வரவு- செலவுத் திட்ட கூட்டத்தொடருக்கு பின்னர் 2026 ஜனவரி 6 ஆம் திகதிவரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

எனினும், பிரதமர் கோரிக்கை விடுக்கும்பட்சத்தில் அவசர நாடாளுமன்ற அமர்வை கூட்டுவதற்கு ஏற்பாடு உள்ளது.
அதற்கமையவே நாடாளுமன்றம் கூட்டப்பட்டுள்ளது.

அதேவேளை, பேரிடர் தொடர்பில் விவாதிப்பதற்கு நாடாளுமன்ற அமர்வை கூட்டுமாறு நாமல் ராஜபக்ச வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Sanath

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!