மாலத்தீவில் இருக்கிறாரா நாமல் ராஜபக்ச? வெளியான தகவல்
 
																																		ஹம்பாந்தோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் இன்று அதிகாலை கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மாலத்தீவில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
நாமல் ராஜபக்ஷ திட்டமிடப்பட்ட விசாரணைக்கு ஆஜராகத் தவறியதை அடுத்து, ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் கைது வாரண்டைப் பிறப்பித்திருந்தது.
நாடாளுமன்ற உறுப்பினர் ராஜபக்சே தற்போது மாலத்தீவில் ஒரு தனியார் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. அவர் நாளை இலங்கை திரும்புவார் என்றும், ஒரு மனுவை தாக்கல் செய்து நீதிமன்றத்தில் ஆஜராவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அறிக்கைகளின்படி, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று காலை தனது அதிகாரப்பூர்வ அரசு பயணமாக மாலத்தீவுக்குச் சென்ற அதே ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் அவரும் பயணித்திருந்தார்.
(Visited 7 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
