இலங்கை

மொரட்டுவை கடற்கரையில் நிர்வாணக்கோலத்தில் கரையொதுங்கிய ஆணின் உடல்

மொரட்டுவ-எகொட உயன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோதரவில் உள்ள ஜெயகத்புர கடற்கரையில் இன்று (22) காலை நிர்வாணமாக ஒரு சடலம் கரை ஒதுங்கியது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

எகொட உயன பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இறந்தவரின் அடையாளம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவர் 50-60 வயதுக்குட்பட்ட ஆண் என்று முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!