இலங்கை செய்தி

இலங்கையில் நீர் தாங்கி ஒன்றில் சிக்கிய மர்மம் – சுற்றிவளைத்த பொலிஸார்

மினுவாங்கொடை பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட கிரிபுதா எனப்படும் தாகொன்னே அவிஷ்கவிடம் இருந்து ஒரு கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் மினுவாங்கொடை, தொட்டிலகஹவத்த, அலுதேபொல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இது கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் பெறுமதி 22 இலட்சம் ரூபாவை அண்மித்துள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள தகோன்னே அவிஷ்கா அல்லது கிரிபுதா, பெரிய அளவிலான போதைப்பொருள் வியாபாரி மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கெஹெல்பத்தர பத்மாவின் சீடர் ஆவார்.

இந்த சுற்றிவளைப்பில் 01 கிலோ 70 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் நீர் தாங்கி ஒன்றில் இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேலும் தெரிவித்தனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!