இலங்கை

பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு தபால் மூலம் அனுப்பப்பட்ட பொதியில் சிக்கிய மர்மம்

பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு விமான தபால் சேவை மூலம் அனுப்பப்பட்ட பொதியொன்றிலிருந்து குஷ் மற்றும் கொக்கேன் போதைப்பொருட்கள் இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த பொதியானது பிரித்தானியாவிலிருந்து கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள முகவரி ஒன்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் ராகம பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நடத்தப்பட்ட சோதனையின் போதே இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த பொதியிலிருந்து 65 கிராம் குஷ் போதைப்பொருளும், 500 மில்லிலீற்றர் கொக்கேன் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த பெறுமதி 13 மில்லியன் ரூபா ஆகும்.

மேலும், விமான தபால் சேவை மூலம் அனுப்பப்பட்ட திரவ வடிவில் கொக்கேன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டமை இதுவே முதல் முறை என்று சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்