இலங்கை

மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட பெண்! பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

பண்டாரவளையில் உள்ள ஹோட்டல் நேற்று (24) மாலை ஒன்றில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் பண்டாரவளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அட்டம்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொலையின் பின்னர், சந்தேக நபர் தப்பிச் சென்றதுடன், அவரது புகைப்படத்தை பொலிஸார் இன்று ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.

சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

தலைமையக பொலிஸ் பரிசோதகர் (பண்டாரவளை) – 0718 591523

குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி – 0718 710108 – 0718594033

மேலும், பொலிஸாரின் விசாரணையின் போது கூரிய ஆயுதம் மற்றும் விஷம் கொடுத்து இந்த கொலை செய்யப்பட்டுள்ளதாக அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு தொடர்புடைய சந்தேகநபர் எழுதியதாக சந்தேகிக்கப்படும் கடிதமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

 

(Visited 3 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content