ஐரோப்பா

பிரான்ஸில் இளம் பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த மர்ம நபர்கள்

பிரான்ஸில் இளம் பெண் ஒருவர் தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான 26 வயதுடைய பெண், நான்கு மாத கர்ப்பிணி என தெரியவந்துள்ளது. யூத பெண் எனும் ஒரு காரணத்துக்காக அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் உள்ள அப்பெண்ணின் வீட்டில் கடந்த நவம்பர் 23 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. தாக்குதலாளிகள் இவ்வாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலை 11 மணி அளவில் அப்பெண்ணின் வீட்டின் கதவை அவர்கள் தட்டியுள்ளனர். கதவு திறக்கப்பட, எதிரே முகக்கவசம் அணிந்த இருவர் நின்றுள்ளனர். பின்னர் அவர்களில் ஒருவர் அப்பெண்ணின் கழுத்தை நெரிக்க, இரண்டாமவர் துப்பாக்கி ஒன்றை எடுத்து அவரை நோக்கி பிடித்துக்கொண்டு மிரட்டியுள்ளார்.

பின்னர் அப்பெண்ணின் முகத்திலும் தாக்கியுள்ளார். “அவர் ஒரு யூதர். அவர் பணக்காரராக இருப்பார்” என அவர்கள் கத்திக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்த அவர்கள் அவரிடம் இருந்த 6,000 யூரோக்கள் பெறுமதியான நகைகளையும், 400 யூரோக்கள் பணத்தினையும் கொள்ளையிட்டுக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content