இலங்கை

இலங்கை – யாழில் பரவும் மர்ம காய்ச்சல் : மக்களுக்கு சுவாச கோளாறுகள் இருப்பதாகவும் எச்சரிக்கை!

யாழ்.மாவட்டத்தில் தற்போது பரவி வரும் திடீர் காய்ச்சல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை அல்லது எலிக்காய்ச்சல் (லெப்டோஸ்பிரோசிஸ்) என உறுதிப்படுத்தப்படவில்லை என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் பதில் சமூக வைத்தியர் டொக்டர் குமுது வீரகோன் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பரவும் காய்ச்சலுக்கு லெப்டோஸ்பைரோசிஸுடன் தொடர்புள்ளதா என்பதை கண்டறிய காய்ச்சல் நோயாளிகளின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறினார்.

அடையாளம் தெரியாத காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுவாசக் கோளாறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, பருவகால நெல் விவசாயம் உட்பட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் எலிக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!