மர்மமான முறையில் இளம்தாய் மற்றும் 02 வயது குழந்தை மரணம்: போலீசார் தீவிர விசாரணை

இரத்தினபுரி எலபாத கெஹல்ஓவிடிகம பிரதேசத்தில் உள்ள தேயிலை தோட்ட லயன் அறையொன்றில் இருந்து இளம்தாய் மற்றும் அவரது ஆண் குழந்தையின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது .
21 வயதான இளம்தாய் மற்றும் அவரது 02 வயதுடைய ஆண் குழந்தை ஒன்றுமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த பெண்ணினன் கணவன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பொலிசாரின் விசாரணையில் தெரிவைக்கப்பட்டுள்ளது.
சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த மரணம் தொடர்பில் நீதவான் விசாரணை இடம்பெற்றுள்ளது. மற்றும் சம்பவம் தொடர்பில் எலபாத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
(Visited 14 times, 1 visits today)