மியன்மாரில் நான்கு ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் பொதுத் தேர்தல்!
தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகத்திடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றிய நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, மியன்மாரில் தேர்தல் நடைபெறவுள்ளது.
10 மாதங்களுக்குள் பொதுத் தேர்தலை நடத்தும் என்று அறிவித்ததாக அரசு நடத்தும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குளோபல் நியூ லைட் ஆஃப் மியான்மர் செய்தித்தாளின்படி, தேர்தல் டிசம்பர் அல்லது ஜனவரி 2026 இல் நடைபெறும் என்று மூத்த ஜெனரல் மின் ஆங் ஹ்லைங் தெரிவித்தார்.
மியான்மரின் இராணுவ அரசாங்கத்தின் சில நட்பு நாடுகளில் ஒன்றான பெலாரஸுக்கு அதிகாரப்பூர்வ விஜயம் செய்தபோது, 53 அரசியல் கட்சிகள் ஏற்கனவே தேர்தலில் பங்கேற்க தங்கள் பட்டியல்களைச் சமர்ப்பித்துள்ளதாகக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மியான்மர் ஒரு உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது
(Visited 22 times, 1 visits today)





