மியன்மார் நில அதிர்வில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் பாரிய உயர்வு

மியன்மாரில் ஏற்பட்ட நில அதிர்வில் இதுவரை சுமார் 150 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மியன்மாரின் இராணுவத்தலைவர் மின் ஆங் ஹ்லைங் இதனை தெரிவித்துள்ளார்.
நில அதிர்வில் 732 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் ஐயம் நிலவுவதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இந்த நிலநடுக்கம் தாய்லாந்தையும் தாக்கியதால் தலைநகர் பெங்கொக்கில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தாய்லாந்தில் நில அதிர்வுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்படும் என அந்த நாட்டு நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
மியன்மாரில் நில அதிர்வில் சிக்குண்டு பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு உதவும் வகையில் இரத்த தானம் மற்றும் மருத்துவ பொருட்களை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.