இலங்கை செய்தி

ரணிலுக்கு எனது ஆதரவு – அமைச்சர் பந்துல

சர்வதேச நாணய நிதியத்தின் பிரகாரம் செயற்படுவதாக உறுதியளிக்கும் வேட்பாளரை ஆதரிப்பதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன கூறியுள்ளார்.

தற்போது ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே அந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்காக 100 வீதம் சர்வதேச ஆதரவைப் பெறக்கூடிய ஒரு வேட்பாளருக்கு மட்டுமே ஆதரவளிப்பதாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

“சர்வதேச நாணய நிதியத்தால் கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தத்தின்படி செயல்படுவதாக உறுதியளிக்கும் மற்றும் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்காக 100 வீதம் சர்வதேச ஆதரவைப் பெறக்கூடிய வேட்பாளரை மட்டுமே நான் ஆதரிக்கிறேன்.

தற்போது ரணில் விக்கிரமசிங்க அந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். எதிர்காலத்தில், அதிக அனுபவம் உள்ளவர்கள் முன்வந்தால், பரிசீலிக்கலாம்,” எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content