ஆசியா

மும்பை தாக்குதல்: முக்கிய குற்றவாளியான அசிம் சீமா பாகிஸ்தானில் மர்மமான முறையில் உயிரிழப்பு!

இந்தியாவின் மராட்டிய மாநிலம் மும்பையில் 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் திகதி அடுத்தடுத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றன. பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தினர்.

இந்த தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய 9 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயது என்ற பயங்கரவாதி மூளையாக செயல்பட்டுள்ளான். ஹபீஸ் சயது தற்போது பாகிஸ்தானில் அந்நாட்டு ராணுவ பாதுகாப்பில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Remembering 26/11: 15 years on since the terror attack — all you need to know | Mint

இதனிடையே, மும்பை தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் மர்மமான முறையில் உயிரிழக்கும் சம்பவங்கள் சமீப காலமாக நடைபெற்று வருகின்றன. துப்பாக்கியால் சுட்டும், விஷம் கொடுத்தும் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுவரும் நிலையில் இந்தியா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் உளவுப்பிரிவு தலைவன் மர்மமான முறையில் உயிரிழந்தார். 70 வயதான பயங்கரவாதி அசிம் சீமா மும்பை தாக்குதலுக்கு திட்டம் தீட்டிய பயங்கரவாதிகளில் ஒருவன் ஆவார். பாகிஸ்தானின் பைசலாபாத் நகரில் வசித்துவந்த பயங்கரவாதி அசிம் சீமா மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். பயங்கரவாதி அசிம் சீமா மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் இந்த சம்பவத்தில் இந்தியாவுக்கு தொடர்பு இருக்குமா? என சந்தேகம் எழுந்துள்ளது.

(Visited 7 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content