இலங்கை செய்தி

அஹுங்கல்ல துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு

அஹுங்கல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வெட்கக்கேடான பகல் துப்பாக்கிச் சூட்டின் தாக்குதலாளிகள் சம்பவ இடத்திற்கு வந்த மோட்டார் சைக்கிளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) மீட்டுள்ளனர்.

அஹுங்கல்ல, கரிஜ்ஜபிட்டிய பகுதியில் உள்ள பாலம் ஒன்றிற்கு அருகில் உள்ள கால்வாயில் மோட்டார் சைக்கிள் மூழ்கிய நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இருவர் பிரபல குற்றக் கும்பல் உறுப்பினரான கொஸ்கொட சுஜீயின் உறவினர் என அடையாளம் காணப்பட்ட நபர் ஒருவரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

உயிரிழந்த 45 வயதான குசும் குமார மெண்டிஸ் என அழைக்கப்படும் “மஞ்சு” என்பவர் கொஸ்கொட பிரதேசத்தில் முச்சக்கரவண்டி சாரதியாக செயற்பட்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!