இலங்கையில் தனியார் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் – இளைஞர்கள் பலி!
ஹொரவ்பத்தானை -கபுகொல்லாவ புகுலேவ சந்தியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ்ஸும் -மோட்டார் சைக்கிளும் மோதியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து இன்று (30) மாலை இடம்பெற்றுள்ளது.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பஸ்ஸுடன் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இவ்விபத்தில் ஹொரவ்பொத்தானை- நெலுகொல்லாவ பகுதியைச் சேர்ந்த பாத்ல சிஹான் (21வயது) மற்றும் பிரவீன் காவிந்த இலங்க சிங்ஹ (20வயது) ஆகிய இருவருமே விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர்களின் சடலம் ஹொரவ்பொத்தானை பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதியை கைது பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





