ஐரோப்பா

நான் தான் பிரித்தானிய பிரதமரின் மாமியார் – லண்டன் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த சுதா மூர்த்தி

பிரித்தானிய பிரதமரது மாமியார் தான் என்பதனை யாருமே நம்புகிறார்கள் இல்லை என எழுத்தாளரும் தொழிலதிபருமான சுதா மூர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை இந்திய நகைச்சுவை நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது சுதா மூர்த்தி வெளிப்படுத்தியுள்ளார்.

ஒரு முறை லண்டனுக்கு சென்ற போது விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு பிரிவில் ஒரு மோசமான சூழ்நிலையை எதிர்கொண்டதாக சுதா மூர்த்தி தெரிவித்துள்ளார்.

“குடிவரவு அதிகாரி எனது விலாசத்தை கூறுமாறு கூறிய போது, நான் டவுணிங் வீதி முகவரியையே எழுதினேன். அந்த அதிகாரி வியப்புடன் பார்த்தார்.” என அவர் குறிப்பிட்டபர்.

இந்தியாவின் பிரபல இன்போசிஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவுநரும் தொழிலதிபருமாகிய என். கே நாராயண் மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தங்குவார் என்று விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் நம்ப மறுத்ததாகக் கூறியுள்ளார்.

தனது மகள் அக்ஷதா மூர்த்தியை மணந்த சுனக்கின் மாமியார் தான் என்பதை பெரும்பாலான மக்களால் நம்ப முடியவில்லை என்று கூறினார்.

விமான நிலையத்தில் நடந்த சம்பவத்திற்கு தனது எளிமையான தோற்றமே காரணம் என அவர் கூறியுள்ளார். குடிவரவு அதிகாரி தன்னைப் பார்த்து “நீங்கள் கேலி செய்கிறீர்களா?” என்றார். “இல்லை, நான் உங்களிடம் உண்மையைச் சொல்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

72 வயது எளிய பெண்ணான நான் பிரதமரின் மாமியாராக முடியும் என்று யாரும் நம்பவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

(Visited 18 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்