சீனாவில் மூட நம்பிக்கையால் சிறுமியை கொன்ற தாய் மற்றும் மகளுக்கு சிறைதண்டனை
தெற்கு சீனாவில்(China) ஒரு பெண் மற்றும் அவரது மூத்த மகளுக்கு, மூடநம்பிக்கையான “பேயோட்டுதல்” சடங்கின் போது இளைய மகளை கொன்றதற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் கடந்த ஆண்டு டிசம்பரில் குவாங்டாங்(Guangdong) மாகாணத்தின் ஷென்செனில்(Shenzhen) இடம்பெற்றுள்ளது.
லி(Li) என்ற குடும்பப்பெயர் கொண்ட தாயும், அவரது மூத்த மகளும், ஆன்மீக பேய் பிடித்தல் உள்ளிட்ட மூடநம்பிக்கை நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளில் ஆழமாக ஈடுபட்டிருந்தனர், அவர்கள் தங்கள் குடும்பத்தை பேய்கள் தாக்குவதாக நம்பினர்.
சம்பவம் நடந்த நாளில், லீயின் இளைய மகள், ஸீ(Xie) என்ற குடும்பப்பெயர் கொண்டவர், தனக்கு ஒரு பேய் பிடித்திருப்பதாகக் தெரிவித்துள்ளார்.
லி மற்றும் அவரது மூத்த மகள் சடங்கை முயன்றனர், இதில் சிறுமியின் மார்பில் வலுக்கட்டாயமாக அழுத்தி, வாந்தியைத் தூண்டுவதற்காக தொண்டையில் தண்ணீரை ஊற்றினர்.
மறுநாள் காலை, இளைய மகள் ஷீ(Xie) வாயிலிருந்து இரத்தம் வந்த நிலையில் மயக்கமடைந்து காணப்பட்டார். அவசர சேவைகள் அழைக்கப்பட்டன, ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
மரணத்திற்கான காரணம் சடங்குடன் தொடர்புடையது என்று அதிகாரிகள் கண்டறிந்து, இரு பெண்களையும் அலட்சியமாக கொலை செய்ததாக குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், ஷென்சென் நீதிமன்றம் லி மற்றும் அவரது மூத்த மகள் இருவருக்கும் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததுள்ளது.





